மழை பெய்யும் பொழுது விதைகள் விதைக்கப்படாமல் இருந்தால், வயலில் பயிர் ஏதேனும் இருக்குமா? விதைகள் விதைக்கப்பட்டு மழை இல்லை என்றால், சாகுபடி இருக்குமா? அறுவடை செய்வதற்கு மழையும் விதையும் இரண்டுமே தேவைப்படுகின்றன. இதுபோல, தெய்வ அருளும் மனித முயற்சியும் இருந்தால்தான் பலன் கிடைக்கும். மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால், நற்செயல்களில் அவை பிரதிபலிக்கும்; எண்ணங்கள் தீயவையாக இருந்தால் அவற்றின் பலன்களும் அதுபோலவே தீயதாக இருக்கும். வெவ்வேறு பக்தர்கள் அவரவர்கள் கடவுளை வழிபடும் முறை நிச்சயமாக வெவ்வேறாகத்தான் இருக்கும். ஆனால், எந்த முறையானாலும், ஒருமுகப்படுத்திய பக்தி இருக்க வேண்டும். கடவுளிடம் செலுத்தப்படும் அன்பே பக்தியாகும். உலகத்தை நோக்கி செலுத்தப்படும் அன்பு பற்றாகும். கடவுளின் மேல் அன்பினை வளர்த்துக்கொள்ளுங்கள்.
– தெய்வீக உரை மார்ச் 2, 1992