ஆன்மாவின் ஸ்வரூபமும், இயற்கையும் நிலையில்லாத எந்த பொருளினாலும் பாதிக்கப்படாமலும், தாக்கம் அடையாமல் இருப்பதற்கும் ஏற்றவாறு உள்ளது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ, பசியோ தாகமோ, துக்கமோ கலக்கமோ இல்லை. பிறப்பும் இறப்பும் உடலின் தன்மைகள், துக்கமும் கலக்கமும் மனதின் நோய்கள். இவற்றிற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்காதீர்கள். நீங்களே அந்த பரமாத்மா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள், சிறுதுளைகளால் ஆன காகிதமானது எவ்வாறு எந்தப் பொருளினுடன் தொடர்பு ஏற்பட்டாலும் கெட்டுவிடுவதைப் போல் இருக்காதீர்கள். சம்சாரமாகிய (அதாவது உலக வாழ்க்கையாகிய) சகதியாக உள்ள ஏரியில் உள்ள தாமரை இலை போல இருங்கள். உங்களைச் சுற்றியுள்ள மண்ணினால் கறைபடாமல் இருங்கள். உலகில் இருங்கள் ஆனால் அதன் வெளிப்புறத்தில் இருங்கள்.
– கீதா வாஹினி (அத்தியாயம் 10)