ஞானம் என்கிற சொல்லிற்கு ஆன்மீக அனுபவமுள்ளவர்களிடம் விசாரம் செய்வதன் மூலம் ஆத்ம தத்துவத்தை உணர உள்ள ஆர்வம் என்றும் பொருள் உள்ளது. இந்த ஞானத்தையோ அனுபவத்தையோ அடைய உங்களுக்கு ஆர்வமிருந்தால் தம்மை உணர்ந்த ஆன்மாக்களிடம் சென்று அவர்களின் அருளைப் பெறுங்கள். அவர்களது மனப்பாங்கையும், ஒழுக்கத்தையும் கவனித்து, அவர்களிடம் உதவி கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அடைய காத்திருங்கள். உங்களுக்கு குழப்பம் எழும்போது, அவர்களை அமைதியாகவும் தைரியமாகவும் அணுகுங்கள். எவ்வளவு கடல் நீர் இருந்தாலும் ஒருவரது தாகத்தை ஆற்ற முடியாது. அதேபோல, எவ்வளவு மணி நேரம் ஆன்மீகப் புத்தகங்களைப் படித்தாலும் உங்கள் குழப்பங்களை சரிபடுத்த முடியாது. ஆன்மீக அனுபவமுள்ள பெரியோர்களிடமிருந்தும், அவர்கள் மூலமாகவும் தான் ஞானத்தை அடைய முடியும். அவர்களுக்கு சேவை செய்து அவர்களது அன்பினைப் பெறுங்கள். அதன்பிறகுதான் அந்த விலைமதிக்கமுடியாத ஞானத்தைப் பெறமுடியும்.
– கீதா வாஹினி அத்தியாயம் 10