அர்ஜுனனுக்கு எது பயனுள்ளதோ அதனையே கிருஷ்ணர் போஷித்தார். அர்ஜுனனின் மதிப்பு, ஆத்மானந்தம் மற்றும் தர்மத்தின் மீது முழுக் கவனமும் செலுத்தினார். அர்ஜுனனைத் தனது உயிர்மூச்சாகவே எண்ணி போஷித்துக் காப்பாற்றினார். ஒருவர் எவ்வாறு தமது கண்கள் மற்றும் இதயத்தைக் காக்கிறார்களோ அவ்வாறே அவர் அர்ஜுனனைக் காத்தார். அவ்வாறாக அவனுக்கு புனிதமான விஷயங்களைக் கற்பித்து, அவனிடம் மாற்றத்தை உண்டு செய்தார். எவ்விதமும் ஒப்பிடமுடியாதபடியாக கிருஷ்ணர் அர்ஜுனனை நேசித்தார். அதுவே உண்மையான குருவின் இயல்பாகும். அர்ஜுனனும் சாதாரணமானவன் அல்ல. அவன் கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, அவரிடமிருந்துப் பெற்ற பணிகளைத் நேர்மையாகக் கடைப்பிடித்தான். எப்படிப்பட்ட நெருக்கடி இருந்தாலும் கிருஷ்ணரின் ஆணையையும் சொல்லையும் தவறாமல் கடைப்பிடித்தான். அந்த ஆண்டவனுடனான தோழமையை, துன்பங்களிலிருந்து தன்னைக் காக்கும் கவசமாக, தான் வசிக்கும் உடலாக, தான் போஷித்து பலப்படுத்திக் காக்க வேண்டிய ஒரு வஸ்துவாக அணிந்திருந்தான். இவ்வாறு தான் குருவும் சீடனும் இணைந்து இருக்கவேண்டும்.
– கீதா வாஹினி, அத்தியாயம் 11