8th March 2012


முனைப்புடன் கூடிய நிலையான நம்பிக்கை ஞானத்தை அடைவதற்கு தேவையானதாகும். அதனுடன் கூடி, உங்களுக்கு குருவின் உபதேசங்களை கிரகிப்பதற்கு ஆழ்ந்த ஏக்கம் இருக்க வேண்டும். விழிப்புடன் இருங்கள். சோம்பேறித்தனத்திற்கோ ஒவ்வாமலோ ஊக்கம் அளிக்காமலோ இருப்பவற்றிற்கோ பணியாதீர்கள். அப்படிப்பட்ட கெட்டத் தாக்கங்களில் இருந்து தப்பிப்பதற்கு புலன்களின் மேல் உங்களுக்கு ஆதிக்கம் தேவை. நம்பிக்கையின்மையோ நிலையாமையோ சந்தேகம் என்கிற விஷத்தைவிட அழிவு ஏற்படுத்துவதில்லை. சந்தேகம் அறியாமையிலிருந்து பிறக்கிறது; உங்கள் இதயத்தினுள் ஊடுருவி, அங்கே தழைக்கிறது. அனைத்து விபரீதங்களுக்கும் மூலமாக இருக்கிறது! பலனின் மேல் உள்ள ஆசையை விலக்கி, முழு நம்பிக்கையுடன் எழுச்சி கொண்டு, உங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். அதன்பிறகு, நீங்கள் ஞானத்தை அடைந்து, மோக்ஷம் பெறுவீர்கள்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

Leave a comment