26th February 2012
பரிசுத்த மன அலைகள் கொண்டு ஆத்ம லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். எது உண்மையான யக்ஞம்? சேர்த்து வைத்துள்ள செல்வத்தை தானம் செய்தலே செல்வத்தினால் செய்யப்படக்கூடிய யக்ஞமாகும். மொத்த உடல் மற்றும் மனதின் செயல்களை ஆன்மீக சாதனைக்கு உபயோகப்படுத்தலே தபோ யக்ஞமாகும். கர்மாவை செய்தும் அதனால் பந்தப்படாமல் இருந்தால், அதுவே யோக யக்ஞமாகும். சித்தம் எனப்படும் மனம் ஒரு திசையிலும் புலன்கள் வேறொரு திசையிலும் செல்லும்பொழுது , அந்த நபர் இரட்டிப்பு குழப்பத்திற்கு ஆளாகிறார். அதனால் பந்தத்தை தூர விலக்குங்கள். நீங்கள் இதை அடைந்தால் உங்களின் ஒவ்வொரு செயலும் யக்ஞமாகிறது. நீங்கள் எதைப் பேசினாலும் அதுவே புனிதமான மந்திரம் ஆகிவிடும். நீங்கள் உங்கள் கால்களை எங்கு பதித்தாலும் அந்த இடத்தையே புனிதமாக்கிவிடும்.
– கீதா வாஹினி அத்தியாயம் 10